தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பேட்டையில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
Published on

பேட்டை:

சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் இசக்கி மகன் பரமசிவன் (வயது 41) கூலித்தொழிலாளி. சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் மகன் நவாப்கான் (36). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நவாப்கான், பரமசிவனை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமசிவன் கொடுத்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நவாப்கானை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com