சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்தது ...!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்தது ...!
Published on

சென்னை,

தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கடந்த மாதம் (ஜூலை) ஆரம்பத்தில் இருந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. அதன் பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் சென்றது மட்டுமல்லாமல், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.200 வரை சென்றது.

தக்காளியை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை எகிறியது. இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை குறைந்துள்ளது.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.10 குறைந்து ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com