தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
Published on

சென்னை,

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அவர், வரும் காலங்களில் பெண் வழக்கறிஞர்கள் தேவை அதிகரிக்கும் என்றும் பெண்கள் நீதித்துறைக்கு அதிக அளவில் வரவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் போராடும் குணம் பெண்களுக்கு தேவை என்று பேசிய அவர், பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்றும் போட்டி இருக்கலாம், பொறாமை போட்டி இருக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே தமிழக நீதித்துறை பணிகளில் 50 சதவீத அளவிற்கு பெண்கள் பணியாற்றுவது பாராட்டுக்குரியது என்றும் தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களின் பங்கு சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com