காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம்

படகில் இருந்து தவறி விழுந்து மாயமான காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம்
Published on

வேதாரண்யம்:

காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியில் சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமாகி விட்டார். இதை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com