கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

திருக்கோவிலூரில் கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
Published on

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் பாம்பு ஒன்று புகுந்தது. இதைபார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று டைல்ஸ் பெட்டிகளின் பின்புறம் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com