வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
Published on

கோபிச்செட்டிபாளையம்,

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே லக்கம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், கரட்டடிபாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதத்திற்குள் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும். மத்திய அரசின் உதவியோடு அடல் லேப் எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகங்களை பள்ளிகளில் அமைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீருடைகள் மாற்றம் செய்யப்பட்டதால் அந்தந்த ஊர்களில் சமூக நலத்துறையின் மூலமாக பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு அளவெடுத்து தைப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை வரும்போது மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com