வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
Published on

சென்னை,

வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com