உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது -எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது -எஸ்.பி.வேலுமணி
Published on

புதுடெல்லி,

டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

அப்போது நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய ரூ.2,029 கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும் கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com