மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

சேந்தமங்கலம்

கூலித்தொழிலாளி

சேந்தமங்கலம் அருகே உள்ள தெத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி சந்திரா. இவர்களது மகன் சிவசக்தி (வயது 22). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சிவசக்தி கடந்த சில நாட்களாக சேந்தமங்கலம் அருகே உள்ள அம்மணபள்ளம் கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் கிணறு தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அபிமன்னன், மகேஷ், வெங்கடாசலம், சுரேஷ் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று வழக்கம்போல் காலை சிவசக்தி கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் சிவசக்தி விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டாரை இயக்கினார். அப்போது திடீரென்று சிவசக்தி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விசாரணை

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவசக்தியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com