மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைதுஏற்கனவே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர்

நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைதுஏற்கனவே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிட தொழிலாளி

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), கட்டிட தொழிலாளி. இவர் பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி பழகி காதல் வலை வீசுவதும், தன்னை காதலிக்கும் சிறுமிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு சிறுமியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதோடு பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்கி இருக்கிறார். அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உள்பட 3 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் விக்னேசுக்கு ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மாணவியை காதலிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து சம்பவத்தன்று மாணவியை விக்னேஷ் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவி வீட்டுக்கு வராததால் அவரை விக்னேஷ் கடத்திச் சென்றதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு மாணவி வீட்டுக்கு வந்தார். அப்போது விக்னேஷ் தன்னை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறி கதறினார். இதை கட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக போலீசார் மாற்றினர். அதன்படி விக்னேஷ் மீது 2-வது முறையாக போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

வாலிபர் கைது

போலீசார் தேடுவதை அறிந்த விக்னேஷ் தலைமறைவானார். இதற்கிடையே விக்னேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே விக்னேசை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விக்னேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com