ராமேசுவரத்தில் நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் பஸ் நிலையம் அருகே சுங்கச்சாவடி எதிரே உள்ள பெரிய மரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.