கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியரை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மணிவண்ணன் தலைமை தாங்கினார். ராஜா கார்த்திகேயன், நந்தகுமார் பாக்கியராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, பணியமைப்பு விதிக்கு முரண்பாடாக வழங்கப்பட்ட நான்கு கிராம நிர்வாக அலுவலர்களின் பணி மாறுதல் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றாத, நிர்வாகிகளை அழைத்து பேசாத கோட்டாட்சியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 29-ந் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம நிர்வாக அலுவலரும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராடுவது என்றும், அதற்குப் பிறகும் நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com