தொழிலாளி மர்மச்சாவு

போடி அருகே தனியார் தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.
தொழிலாளி மர்மச்சாவு
Published on

போடி அருகே உள்ள டி.அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 58). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகாததால் உறவினர் வீடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராசிங்காபுரத்தில் இருந்து சின்ன பொட்டிபுரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது அண்ணன் மகன் பாரத் போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெய பாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com