வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்

வீட்டில் இருந்த இளம்பெண் மாயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்
Published on

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் மகள் புவனேஸ்வரி (வயது 22). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் குணசேகரன் காகித ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு பணிகள் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தனது மகள் புவனேஸ்வரியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த குணசேகரன், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், பல்வேறு பகுதிகளிலும் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் புவனேஸ்வரி கிடைக்கவில்லை. இதுகுறித்து குணசேகரன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரியை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com