திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டு வாசலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருவாரூரில், திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டு வாசலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டு வாசலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

கொரடாச்சேரி:

திருவாரூரில், திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டு வாசலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கணவரை இழந்த பெண்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே உள்ள திரு.வி.க. நகரை சேர்ந்த சையது உசேன் மனைவி ரெஜினா பேகம்(வயது 34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், ரெஜினா பேகம் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.திருவாரூரை சேர்ந்தவர் செல்வகணபதி(31). சையது உசேனின் நண்பரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் ரெஜினா பேகத்துக்கு அனைத்து உதவிகளையும் செல்வகணபதி செய்து வந்துள்ளார்.

திருமணம் செய்வதாக..

மேலும் அவர் ரெஜினாபேகத்தை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு ரெஜினாபேகத்தின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரெஜினாபேகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். இதனால் அவர் செல்வகணபதியின் செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த செல்வகணபதி நேற்று முன்தினம் இரவு திரு.வி.க. நகரில் உள்ள ரெஜினாபேகத்தின் வீட்டு வாசலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வகணபதியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com