தீரன் சின்னமலை நினைவு தினம் - அண்ணாமலை புகழஞ்சலி

தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
அண்ணாமலை
Published on

கோவை,

வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மாவீரர் தீரன் சின்னமலை

ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.

அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும், தீரன் சின்னமலை அவர்களின் தனித்துவ அடையாளம்.

தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com