கடத்தூர் அருகேஜவுளி கடைக்காரர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

கடத்தூர் அருகேஜவுளி கடைக்காரர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
Published on

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரன் என்கிற அன்பு. இவர் கடத்தூரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி துணி கொள்முதல் செய்வதற்காக கணவன், மனைவியுடன் மும்பைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர்களுடைய மகள் தேன்மொழி (வயது 26) அருகே தனது பெரியம்மா வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தேன்மொழிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தேன்மொழி கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com