தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகள் திருட்டு

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தனியார் தொழிற்சாலையில் பேட்டரிகள் திருட்டு
Published on

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து தொழிற்சாலையின் முதுநிலை மேலாளர் முருகன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து தனியார் தொழிற்சாலையில் பேட்டரி திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com