மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 36). இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com