மில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

வேடசந்தூர் அருகே மில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
மில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல். இவர், அய்யர்மடம் அருகே உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை இவர், வழக்கம்போல மில்லுக்கு சென்று விட்டார். அவருடைய மகள் தனிகாஸ்ரீ, வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று விட்டார்.

இதேபோல் வடிவேலுவின் மனைவி மகஷேவரி, மதியம் 2 மணி அளவில் கதவை பூட்டி விட்டு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். பொருட்கள் வாங்கி விட்டு சிறிதுநேரம் கழித்து மகேஷ்வரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.52 ஆயிரம் திருட்டு போய் இருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com