அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருட்டு

திருவையாறு அருகே அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருட்டு
Published on

திருவையாறு;

திருவையாறு அடுத்த பள்ளியக்ரஹாரம் மணக்கரம்பை மங்களம் நகரை சேர்ந்தவர் ராஜவர்மன்(வயது53). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வள (பொறுப்பு) அலுவலராக பணிபுரிந்துவருகிறார். இவர் மனைவி லதா தஞ்சை மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.நேற்று இவர்கள் பணிக்கு சென்றுவிட்டனர். மதியம் ராஜவர்மன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது வீட்டில் பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.2500 திருட்டுப்போனது தெரியவந்தது. இது குறித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ராஜவர்மன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர் கார்த்திகேயன் வந்து கைரேகைகளை பதிவு செய்தார். இது குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com