தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு மஞ்சளாறு அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு

தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு மஞ்சளாறு அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்படுகிறது
தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு மஞ்சளாறு அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு
Published on

தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இதில் அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதாறும் முதல் போக பாசனத்திற்கு அக்டோபர் மாதம் 15-ந்தேதி அணையில் இருந்த தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்ததால் ஜூலை 31-ந்தேதி அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது வரை நீர்மட்டம் 55 அடியிலேயே நீடிக்கிறது. இதனால் வழக்கம்போல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com