வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு....! இந்திய வானிலை ஆய்வு மையம்

வடதமிழக கடலோர பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு....! இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி, 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது உள்ளது. இதனால் வடதமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக-புதுச்சேரி கடற்கரை பகுதியில் 12-ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com