வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

52.50 அடி கொள்ளளவு கொண்ட அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com