வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடைபெற்றது.
வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
Published on

வந்தவாசி

வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்நடைபெற்றது.

வந்தவாசியில் ரங்கநாதர் பெருமாள் ஆலயத்தில் தை மாத 3-ம் வெள்ளியையொட்டி ரங்கநாயகி தாயாரின் உள்வளாக வீதி உலா நடைபெற்றது. இதனையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன், சந்தனம், உள்ளிட்ட திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்று. சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாயகி தாயாரை பக்தர்கள் தோளில் சுமந்த படி மங்கள வாத்தியங்களுடன் உலா வந்தனர்.

பின்னர் உள் புறப்பாடு நிகழ்ச்சிகள் செய்யபட்டு தீப, துபா ஆராதனை நடைபெற்றது. திருப்பாவை பாசுரங்கள் மற்றும் நாம சங்கீர்த்தனம் பாடப்பட்டது. இதில் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com