குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Published on

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு திருவிளக்கு பூஜைநடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டுகாலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை ,. மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜை , இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பின்னர் மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com