"இது கலைஞரின் தாஜ்மஹால்!" - ரஜினி நெகிழ்ச்சி

கருணாநிதி நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
"இது கலைஞரின் தாஜ்மஹால்!" - ரஜினி நெகிழ்ச்சி
Published on

சென்னை, 

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பிரமாண்டமான கலைஞர் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இவற்றை இன்று மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "மிகவும் அருமை. மிகவும் அற்புதம். கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com