ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும், மேலும் காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலைய வரவேற்பாளரிடம் புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட டி.எஸ்.பி. நிரேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story






