சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவு பரிசு: தூத்துக்குடி எஸ்.பி. வழங்கினார்


சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவு பரிசு: தூத்துக்குடி எஸ்.பி. வழங்கினார்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி கிழக்கு, விளாத்திகுளம், எட்டையபுரம் ஆகிய 3 காவல் நிலையங்களை மாவட்ட எஸ்.பி. சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.

அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி தென்பாகம், சிப்காட், கோவில்பட்டி மேற்கு ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சிப்காட், புதுக்கோட்டை, கோவில்பட்டி கிழக்கு மற்றும் புதியம்புத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்சொன்ன மொத்தம் 8 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

1 More update

Next Story