தூத்துக்குடி: சிறுமியை கிண்டல் செய்த எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை...!

திருச்செந்தூரில் சிறுமியை கிண்டல் செய்த எலக்ட்ரீசியனை தந்தை வெட்டி கொலை செய்து உள்ளார்.
தூத்துக்குடி: சிறுமியை கிண்டல் செய்த எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை...!
Published on

உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன்(20). இவருடைய அக்காள் உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வருகிறார். இன்று இவருடைய மகளுக்கு மெட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி நம்பி கோவிலில் வைக்கப்பட இருந்தது.

இதற்காக மணிகண்டன், தனது நண்பரான நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வசந்தபுரம் தெற்கு தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன்(32) என்பவரை அழைத்துள்ளார். இதற்காக கண்ணன் நேற்று இரவு திருச்செந்தூர் வந்துள்ளார். அவரை மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த ராஜ்(40). கூலி தொழிலாளியான இவரது மனைவி, மகள் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த கண்ணன், அவர்களை பார்த்து உடன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கினார். இதையடுத்து ராஜ் மனைவி ஏன் என் மகளை கிண்டல் செய்கிறாய் என கண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், அன்று நள்ளிரவு வீரராகவபுரம் குதிரை வண்டி தெருவில் நண்பர்களான கண்ணன், மணிகண்டன், விக்கி மற்றும் காசி ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தனது மகளை கிண்டல் செய்ததாக ராஜ், அதே பகுதியில் வசித்து வரும் தனது மைத்துனர் ராஜ் வடிவேலுடன் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனை கழுத்து மற்றும் உடல் பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கண்ணன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் கோவில் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தை ராஜை கைது செய்த நிலையில் மாமா ராஜ வடிவேலை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com