தூத்துக்குடி: சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ: 6 பேர் கைது


தூத்துக்குடி: சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ: 6 பேர் கைது
x

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்த வாலிபரும் அவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (வயது 34) மற்றும் இவரது நண்பர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில், நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சமூக அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்களான நாசரேத் ஞானராஜ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் தங்கத்துரை(24), சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் இசக்கிமுத்து(19), அம்பலச்சேரியை சேர்ந்த முருகன் மகன் மாணிக்கராஜா(24), சின்னத்துரை மகன் மீனாட்சிசுந்தரம்(21), அம்பலச்சேரியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் தளவாய்பாண்டியன்(26) ஆகிய 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் 6 பேரும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

1 More update

Next Story