தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபரை முறப்பநாடு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் கடந்த 30.8.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட முறப்பநாடு, பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி (வயது 28) என்பவரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





