ஈரானில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயம்: மீட்டுத் தரக் கோரி கலெக்டரிடம் தந்தை மனு

ஈரானில் தற்போது போர் சூழலில் எனது மகனைப் பற்றிய தகவல் இல்லை. எனவே காணாமல் போன எனது மகனை மீட்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரானில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயம்: மீட்டுத் தரக் கோரி கலெக்டரிடம் தந்தை மனு
Published on

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எனது மகன் கடந்த 7.5.2025 அன்று ஈரானில் கப்பலில் வேலைக்கு சென்றுள்ளார்.

தற்போது போர் சூழலில் எனது மகனைப் பற்றிய தகவல் இல்லை. எனவே காணாமல் போன தனது மகனை மீட்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com