ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
Published on

கொள்ளிடம்:-

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதை ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் ஆரோக்கியராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குனர் உமாநாத், கணினித்துறை தலைவர் விஜயலட்சுமி, மின்னியல் துறை தலைவர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி மாணவர்கள் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com