சட்டப்போராட்டத்தின் மூலம் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

‘நீட்’ தேர்வு முடிவில் தமிழகம் கடைசி இடத்தை பிடித்ததற்கு ஆட்சியாளர்கள் வெட்கி தலை குனியவேண்டும் என்றும், சட்டப்போராட்டத்தின் மூலம் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்போராட்டத்தின் மூலம் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நீட் தேர்வு முடிவில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய சராசரி தேர்ச்சி விகிதத்தை விட மிக குறைந்த தேர்ச்சி விகிதத்தையே தமிழகம் பெற்றிருக்கிறது. நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதையும், நீட் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தோற்கவேண்டும் என்பதில் மத்திய அரசு வென்றிருப்பதையும் இது காட்டுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com