கொலை வழக்கில் கைதான3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

சேலம்

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கோகுல்நாத் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் கோபிநாதன் (30) மற்றும் வெங்கடேஷ் (35). இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த மாதம் 30-ந்தேதி முன்விரோதம் காரணமாக பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை வெட்டிக்கொலை செய்தனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரும் பல்வேறு வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளதாகவும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல், பரிந்துரை செய்தார். 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் சிறையில் உள்ள கோகுல்நாத், கோபிநாதன், வெங்கடேஷ் ஆகிய 3 பேரிடம் போலீசார் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com