வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சவுந்திரபாண்டியன் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 30). இவரை மானூர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று இசக்கியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி இசக்கியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை மானூர் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com