வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் இளவரசன் (வயது 32). தந்தை, மகன் இருவரும் கடந்த 1-ந் தேதி கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து தனது வீட்டின் அருகே காரில் மறைத்து வைத்து இருந்தனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று 743 லிட்டர் மது பானம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இளவரசன் மீது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் இளவரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com