திமிரி பேரூராட்சி கூட்டம்

திமிரி பேரூராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
திமிரி பேரூராட்சி கூட்டம்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சி கூட்ட அரங்கில் நேற்று பேரூராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் மாலா இளஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கௌரி தாமோதரன், செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும், சாலை வசதியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் நவீன்குமார் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com