திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி 1995-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனரால் துவங்கப்பட்டது. இளநிலை பட்டப்படிப்பில் ஆறு துறைகளையும், முதுநிலை பட்டப்படிப்பில் ஆறு துறைகளையும் கொண்டுள்ளது. இக்கல்லூரி NBA , TCS அங்கீகாரம் மற்றும் ISO 9001:2015 தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது.

தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை( DS-IR ) இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத் துறைக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

என்ஜினீரியங் படிப்பில் கட்டவியல் துறை ( Civil ), இயந்திரவியல் துறை

( Mechanical ), கணினித்துறை ( CSE ), மின் மற்றும் மின்னணுத் துறை ( EEE ), தகவல் தொழில் நுட்பத்துறை ( IT ), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை ( ECE ) மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பில் கணினித்துறை ( MECSE ), தகவல் தொழில் நுட்ப துறை ( M.Tech ), ஆற்றல் சார் மின்னணுவியல் மற்றும் டிரைவ்ஸ் ( MEStructural ), வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு பொறியியல்

( MEVLSI Design ) மற்றும் வணிக நிர்வாகத்துறை( M.B.A ) ஆகிய பிரிவுகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com