திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

பாப்பாக்குடி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி, இடைக்காலை சேர்ந்த கணேசன் மகன் சுதன் (வயது 20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவேல் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், சுதன் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், சுதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

இதேபோல் மூலைக்கரைப்பட்டி பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சின்னமூலக்கரை, வடக்குத் தெருவை சேர்ந்த பூல்பாண்டி மகன் முத்துகுமார்(25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை மிரட்டல், வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், முத்துக்குமார் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், முத்துக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story