திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
திருநெல்வேலி
தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரைச் சேர்ந்த அபுபக்கர் மகன் செய்யது இப்ராஹீம்ஷா (வயது 23) போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று செய்யது இப்ராஹீம்ஷா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story






