திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது


திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
x

திருநெல்வேலியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவலை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவலை சேர்ந்த ஆதிகிருஷ்ணன் (வயது 30) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 9 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆதிகிருஷ்ணனை முன்னீர்பள்ளம் காவல் நிலைய போலீசார் தேடிவந்த நிலையில் இன்று (7.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

1 More update

Next Story