திருப்பூர்: ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலி

தம்பதியர் 2 பேர் மீதும் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின.
திருப்பூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலி.
பலியான தம்பதி
Published on

திருப்பூர்,

திருப்பூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி தம்பதி பலியாகினர்.

விபத்து

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55). இவரது மனைவி பேபி (வயது 47). இந்த தம்பதியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்களது ஸ்கூட்டியில் காங்கேயம் அருகே உள்ள முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது ஸ்கூட்டியின் மீது பயங்கரமாக மோதியது.

தம்பதி உயிரிழப்பு

இந்தக் கடுமையான மோதலின் தாக்கத்தால், அண்ணாமலை மற்றும் பேபி ஆகிய இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் உடல் நசுங்கி, தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்துத் தகவல் அறிந்து காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த தம்பதியினரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் கணவன், மனைவி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com