

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவி பலியானாள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகள் நந்திதா (வயது11), அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் ஓட்டிய பள்ளி வேனில் சக மாணவிகளுடன் நந்திதா சென்றாள்.
மேட்டுப்பாளையம் அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் சிக்கிய 5 மாணவிகளை பொது மக்கள் மீட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நந்திதா பரிதாபமாக உயிரிழந்தாள். படுகாயமடைந்த மற்ற 4 சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.