

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில் காக்காப்பள்ளம் அருகே இன்று ஏற்பட்ட இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.