இலங்கை விவகாரம்: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என வெளியுறவு மந்திரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை விவகாரம்: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மார்ச் 31-ம் தேதி பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன்.

தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com