இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம்
Published on

சென்னை,

தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்று விடுகின்றனர்.

அவர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டுமென மீனவ அமைப்புகள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற 46 மீனவர்கள் மற்றும் 26 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வெளியுறவுத்துறை மூலம் உடனடியாக பேசி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசுக்கு கடிதத்தில் முதல் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com