சென்னையில் இருந்து ரஷிய விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்

தமிழக அரசின் ஊக்குவிப்பில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் முதற்கட்டமாக 50 மாணவ-மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா புறப்பட்டனர்.
சென்னையில் இருந்து ரஷிய விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
Published on

விஞ்ஞானி சிவதாணு பிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ஆன்லைன் மூலமாக ஏவுதள அறிவியல் பயிற்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பயிற்சி வகுப்பில் 300 பேர் பங்கேற்றனர். பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 6 மாணவ-மாணவிகளும் அடங்குவார்கள். இவர்களில் 4 மாணவர்களுக்கு ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட நிதியுதவி கிடைத்தது. மீதம் உள்ள 2 மாணவர்களுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட முதல் கட்டமாக 50 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 10 ஆசிரியர்கள் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றனர். விமான நிலையத்தில் மாணவ-மாணவிகளை எம்.எல்.ஏ. இ.கருணாநிதி பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வழியனுப்பி வைத்தார். இதில் பல்லாவரம் மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com