டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் -1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 நிலையில், காலியாக இருந்த 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12 முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 441 பேர் எழுதிய நிலையில், அதற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை tnpsc.gov.in மற்றும் tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே முதல்முறையாக தேர்வு நடைபெற்ற 145 நாட்களுக்குள் குரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும் என்று அதன் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com